Thursday, 27 June 2013

இது என் கிராமத்தை digitalஇல் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு சிறு முயற்சி மட்டுமே நீங்களும் உதவலாமே .

இது இந்த வருட திருவிழாவில் எடுத்த புகைப்படங்கள் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு கிடைத்ததில் சில .
.நான் என்னுடைய பய்க்கில் வந்ததால் சடயன்பட்டி வழியாக வரும் பொது கிளிக் பண்ணியது
அடுத்தாது பஸ் ஸ்டாப் உடையம்பட்டியில் இருந்து எங்கு செல்ல வேண்டும் அனாலும் இங்குதான் வரவேண்டும் நேராக சென்றால் புதுக்கோட்டை வளைந்தால் உடையம்பட்டி

உடையம்பட்டி செல்லும் வழி


அதற்கு அடுத்துவரும் ஆலமரம் நினைவு தெரிந்த நாள் முதல் பழக்கம் பால்ய கால நண்பன் போல



வற்றி போன குளம் நான் சென்றது கோடைகாலம் தண்ணிர் இருந்தால் கண்கொள்ள கட்சியாக இருக்கும்


குளம் அருகில் உள்ள சமி

உடையம்பட்டி மக்கள் தண்ணிர் பிடிக்கும் இடம் இப்போது அதுவும் வருவது இல்லை கிராமம் முழுவது கேன் தண்ணிதான்



ஊரு வந்துருச்சு.................


இவரு ரொம்ப முகியமனவரு இப்ப இட்லிக்கு மாவு போட்டாலும் அன்னைக்கு இவரு வேலைய காடிருவரு அட அமங்க fuse போய்டும் அப்புறம் ஆட்களை பிடித்து fuse போட்டாதான் வேலை நாடாகும் இரவு போச்சுன சிவராத்திரிதான்


திருவிலநேரதுல மட்டும் தான் இவர பார்க்கமுடியும் சலுன்கடை மதி இந்த தடவை இவரிட்ட முடி வெட்டி கொண்டேன் இந்த மாதிரி கடையில் முடி வேட்டிகொல்வதை இளைஞர்கள் விரும்புவது இல்லை ஏன் என்று தான் புரியவில்லை 






கரக எடுப்பில் முதல் நாள் நிகழ்வுகள்




இரண்டம் நாள் பொங்கல் நிகழ்வுகள்


பார்வேட்டைக்கு முன்பு அமைதியாக உள்ள இடம்
.
பார்வேட்டை ஆரம்பித்தஉடன்

வேஷம் போட்டுருகரம?

கிளம்பிடாமுலல

அடுத்த உடையான்பட்டிகரன்

என்ன வேணுப உங்களுக்கு

முனிவரே இது சரி அல்ல

தேசிங்கு ராஜ கிளம்பிட்டாரு 

என்ன ஆட்டம் போடுது பயபுள்ள

சின்ன முதலம்மன் கோவில் முன்பு ஒரு சின்ன அலப்பறை

சின்ன முதலம்மன் கோவில் முன்பு ஒருபெரிய அலப்பறை

யார் இந்த கரடின்னு தெரியல

லக்ஷ்மி அண்ணன் பக்கத்துல யாருன்னு தெரியல

இந்த கட்டுவசி யாருனும் தெரியல

நண்பர்களே உங்களிடம் உள்ள உடையாண்பட்டி புகைப்படங்களை தந்து உதவும்மாறு கேட்டு கொள்கிறோம்

இது என் கிராமத்தை digitalஇல் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு சிறு முயற்சி மட்டுமே நீங்களும் உதவலாமே .

Sunday, 23 June 2013

அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மானைவிக்கு அண்ணன் லக்ஷ்மி காந்தன் அவர்கள் ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கும் பொது எடுத்த படம்

உடையம்பட்டி திருவிழாவில் உடையாம்பட்டி உரில் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மானைவிக்கு அண்ணன் லக்ஷ்மி காந்தன் அவர்கள் ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கும் பொது எடுத்த படம் இது விளம்பரம் அல்ல விதை அது யார் போட்டதுன்னு தெரிய அவசியம் இல்லை அனால் விதை போட்டவர் இவர் தான் அண்ணன் லக்ஷ்மி காந்தன் அவர்களுக்கு நெஞ்சர்த நன்றிகள்

கூட இருபவர்கள் இடும்பைய தாத்தா,இடும்பைய நைனா, பழனிவேலு மாமா. பரிசு வாங்குபவர்' முருகேஸ்வரி அக்கக்வுடைய மகள் அழகு மீனா வாழ்த்துக்கள் அழகு மீனா

நண்பர்களே மறுபடியும் வேண்டுகோள் திருவிழா புகைபடங்களை udaiyanpattikaran@gmail.com என்ற முகவரிக்கு அனுபும்மாறு தாழ்மையுடன் கேட்டுகொல்கேறோம்.

நன்றி

Tuesday, 28 May 2013

கோனை


இவர்தான் கோனை 

கையில் வெள்ளி காப்புகளுடன்

விபூதி, வெள்ளருகன்கயிரு சகிதம்

கோனை  இவரை பற்றி உடையான்படி சுற்று வட்டாரத்தில் அறியாதவர் இருக்கமுடியாது அந்தகாலத்து ஆள்,கையில் நிறைய வெள்ளிகப்புகளும் இடுப்பில் விபூதி மற்றும் வெள்ளருகன் கயிரும் பார்க்கலாம்.சாதாரணமாக இருக்கும் இவரிடம் சில அமானுஷ விசஷம் இருகின்றது என்பது என் பாட்டி சொல்லி அறிந்துகொண்டேன்,
பேய் பிசாசு கதைகள் கிராமத்தில் சகஜம் என்றாலும் சமயத்தில் நம்பும் படியாக உள்ளது. எல்லாவற்றிகும் எதிர்வினை உண்டு என்பதும் அறிவியல் தான்.பகல் மனிதனுக்க என்றல் இரவு யாருக்காக?. கடவுள் இருக்கிறார் என்றல் அதற்கு எதிர்வினை என்ன? (கடவுள் இல்லை என்பவர்களுக்கு இந்த கேள்வி இல்லை)
 அவரிடம் பேசும் வாய்ப்பு இந்த திருவிழாவில் கிடைத்தது கையில் ஏன் இவ்வளவு காப்பு போட்டு உள்ளீர்கள் என்று அதற்கு அவர் பாதி விட்டில் உள்ளது என்றும் இது நேர்த்திகடனுகாக போடப்பட்டவை என்றும் சொன்னார்

ஒருவர் ஒன்றை நினைத்து இவரிடம் திருநீர் வாங்கி கொண்டு அந்த விஷயம் நடந்தால் ஒரு வெள்ளி காப்பு போடுவிடுவர்கலம் இதுதான் அதன் பின்னணி ரொம்பநாள் சந்தேகம் அன்று திர்ந்தது.அவரிடம் பேசிவிட்டு ஒரு வெள்ளருகன் கயிரும் கட்டிகொண்டேன்,இது போன்ற மனிதர்களை கிராமத்தில் மட்டுமே பார்க்கமுடியும். இவர்களை போல் சிலர் நகரத்திலும் இருகிறார்கள் அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் தெய்விக கலையை காசு சம்பதிபதற்காக பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் இவர் வாங்கும் பணம் வெற்றிலை பாக்கு  வங்க ஆகும் பணம் தான்.

Wednesday, 8 May 2013

செந்தாழ கணைமுள்

இது நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பதிவு இளையதலைமுறைக்காக அவர்கள் ஆரோக்யமாக வாழ்வதற்காக ஒரு சிறிய முயற்சி, விருப்பம் இருந்தால் பகிரவும் நன்றி. ஒன்று முதல் ஆறு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருகிறதா?எவ்வளவு சாப்பிட்டாலும் குழந்தைகள் எழும்பும் தோலுமாக உள்ளனரா கவனிக்கவும் உங்களுக்கான பதிவுதான் இது.


என் சகோதரி குழந்தை வயது நான்கு, LKG படிக்கிறா, நல்ல குறும்பு பண்ணுவா, நல்லவே விளையாடுவா, ஆனா ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அடிக்கடி ஜுரம் வரும் டாக்டர்கிட்ட கேட்டா காலமாற்றம் அதனாலதான் என்பார். குழந்தை நல்லா சாப்பிட்டாலும் உடம்பு தேரவேயில்லை. நொறுக்கு தீனி சாப்பிடுவதால்தான் இப்படி என்று நாங்கள் நினைத்தோம்.
குழந்தை பரீட்சை விடுமுறைக்கு உடையாண்பட்டி வந்து உள்ளனர் அப்போதும் அடிக்கடி உடம்பு சரில்லாமல் போனது.இதைபற்றி எனது பாட்டிகிட்ட கேட்டபோது பாப்பாவ கிட்டகூப்பிட்டு குழந்தை முதுகை தடவி பார்த்தார்கள், பார்த்துவிட்டு கணைமுள் மாதிரி இருக்கு எதுக்கும் கடலங்காடு கெழவி(என் பாட்டியின்தோழி)வந்ததும் பார்க்க சொல்லுறேன் என்றார்கள்(வயதான காரணத்தால் அவர்களுக்கு கண் அவ்வளவாக தெரிவது இல்லை)பிறகு கடலங்காடு பாட்டி வந்து முதுகை தடவி பார்த்து கனைமுள் என்று உறுதிசெய்தது.

நாங்க பார்த்தவரைக்கும் எங்களுக்கு ஒன்னும் தெரியல நல்லாதானே இருக்கு. இவுக என்னனமோ சொல்லுராங்கலேன்னு நினைச்சோம்.பிறகு பாட்டி சொன்னது முள் எடுக்க கன்றுபெறாத எருமை சாணி வேணும் அப்பதான் அந்த முள்ள எடுக்க முடியும்னு நாளைக்கு கொண்டுவந்து எடுக்கலாம்னு சொல்லிடு போய்டாங்க, எங்களுக்கு சிரிப்பு தாங்கல, முதுகுல எப்படி முள் குத்தும் அப்படி இருந்தாலும் கொஞ்சமாவது தெரியுமுல என்று எங்களுக்குள் பாட்டிக்கு கேட்காதவாறு பேசிகொண்டோம்.மறுநாள் காலை சொன்னது போல சாணி உடன் கடலங்காடு பாட்டி வந்துச்சு.
எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் என்னுடைய பாட்டிக்கா ஒத்துகொண்டோம் பிறகு அவர்கள் பாப்பாவின் முதுகை தடவிபார்த்து அந்த மாட்டின் சாணியை மேல் முதுகு தண்டுவடம் மற்றும் கீழ்முதுகு இந்த இடங்களில் வட்டவடிவில் தேய்த்துகொண்டே இருந்தார்கள் பிறகு தண்ணிர்ஊற்றி கழுவி பார்த்தா அவுங்க தடவிய இடங்களில் வெள்ளை நிறத்தில் முள் போன்று, செடி முளைப்பது போன்று வெளியே வந்து நின்றது அந்த செந்தாழ கனைமுள். எங்கள் கண்களை நம்பமுடியாமல் பார்த்துகொண்டு நின்றோம், உடனே கடலங்காடுபாட்டி சொன்னது என்ன ஆத்தா பாத்துக்கிட்டு இருக்க மெல்ல இந்த முள்ள எல்லாத்தையும் ஓர தடவையில் பிடுங்கிடு இல்லையினா மறுபடியும் உள்ள போய்டும் என்றார்கள், சுயநினைவு வந்தவர்களாக வேலையை கவனிக்க ஆரம்பித்தோம்.
இப்படியாக ஐந்துமுறை முள் எடுத்தோம் பாப்பாவுக்கு வலிக்கவில்லை என்றாலும் என்னமோ பன்னுராங்கன்னு நினைத்து கடந்து கத்த ஆரம்பிச்சுடா ஒருவழியா அவள சமாதனம் பண்ணி கணை முள்ள எடுத்தாச்சு.


இந்த செந்தாழகணை முள் இருந்தால் குழந்தை எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேராது,அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும், இந்த செந்தாழகணை முள்ளை அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். அதாவது நம்ம பாட்டி அல்லது தாத்தா இவர்களால் மட்டுமே முடியும் தயவுசெய்து நீங்கள் முயற்சி செய்யவேண்டாம். இந்த கணை முள்ளை குழந்தை பருவத்தில் மட்டும் அல்ல இருபது வயதுவரைக்கும் எடுக்கலாம் என்று சொன்னார்கள். இதை எடுக்காமல் விட்டால் வாலிபபருவத்தில் வயதுக்கு ஏற்ற உடம்பு இல்லாமல் சில மனகஷ்டங்களை சந்திக்கநேரிடும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்புசரியில்லாமல் போகும்.(அந்த முள் எப்படி வந்தது, அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்று ஆராய்ச்சி பண்ண எனக்கு நேரம் இல்லை ஏன் என்றால் என்ன காரணம்னு தெரியாமல் இருந்த ஒரு பிரச்சனைக்கு அசால்டா முடிசுவச்ச பாட்டிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.) இப்படித்தான் நிறைய விசயங்களை நாம் பெரியவர்களிடம் சொல்வது இல்லை அவர்களுக்கு இதை பற்றி என்ன தெரிய போகுது என்ற மேதாவிதனம், நீ வாழும் வாழ்க்கையை அவர்களும் வாழ்ந்தார்கள். ஆனால் உனக்கு கிடைத்தது போல அவர்களுக்கு எந்தவிதமன அடிப்படை வசதிகளும் இல்லாமல் நோய் அற்ற ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.இப்போது புரிந்து இருக்கும், உனக்கு தெரிந்த விசயங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், வாய்ப்புகிடைத்தால் அவர்களும் உனக்கு தெரிந்ததை விஷத்தை கற்று கொள்ளலாம். ஆனால் நீ என்ன முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தெரிந்ததை உன்னால் கற்றுகொள்ள முடியாது, உன்னால் நம்பமுடியாவிட்டாலும் இதுதான் நிதர்சன உண்மையும்கூட. தயவு செய்து வயதானவர்களுடன் நேரம் செலவு செய்யுங்கள்.அது நீங்கள் வாழபோகும் வாழ்க்கைக்கு ஒரு மிக பெரிய அனுபவமாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.

முதல்வேலையா திருவிழாவுக்கு போய்ட்டு கடலங்காடு பாட்டிக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்.


நன்றிகளுடன்
உடையான்பட்டிகாரன்

Tuesday, 9 April 2013

வைகாசி திருவிழா


உடையாண்பட்டி முத்தாளம்மன் கோவில்
வைகாசி திருவிழா வரபோகுது ஊருக்கு போவதுக்கு இப்பொழுதே விடுப்புக்காண விண்ணப்பம் கொடுத்தாச்சு,திருவிழா வருவதற்கு முன்னாடி உங்களுக்கு திருவிழாவை பற்றி ஒரு சில சுவாரசியமான விஷயம் சொல்லாம போன எப்படி?
வைகாசி 7 அதாவது மே21 அன்று அருள் மிகு முத்தாளம்மன் கோவில் திருவிழா தொடங்கும். தொடர்ந்து முன்று நாட்கள் நடக்கும் அந்த முன்று நாட்களும் உடையாண்பட்டியில் இருந்து எங்கு சென்று குடி இருந்தாலும் கண்டிப்பாக திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள்.

.திருவிழாபற்றி சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு பழைய கதை ஒன்னு சொல்லிடுறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெயர் இருந்துச்சுன்னு முன்னாடி சொல்லிஇருக்கேன் அதுல ஒன்னுதான் பசலிட்டிவாலு. முன்னாடி இந்த குடும்பத்துகாரங்க சின்ன முத்தாளம்மன்ன்னு தனியா ஒரு கோவிலுக்கும் மத்தவங்க முத்தாளம்மன் கோவிலுக்கும் தனி தனியா திருவிழா எடுத்தாங்களாம்.
சின்ன முத்தாளம்மான் கோவில்(முன்னாடி இங்க கோவில் இருந்தது அதை இடித்து விட்டு
புதிதாக கட்டிக்கொண்டு இருகிறார்கள்)

 அப்புறம் ஊருல ஆட்கள் குறைவானதும் எல்லோரும் ஒன்னு கூடி பேசி ஒன்னா திருவிழா எடுக்கலாம்னு முடிவுபண்ணினார்கள், இப்ப ஒரு திருவிழாதான். ஆனால் பசலிட்டிவாலு இப்பொழுதும் அவர்கள் குலதெய்வம் இடும்பையாவிற்கு வருடத்துக்கு ஒரு முறை ஆடி மாதம் பௌர்ணமி அன்று கும்பிடும் குலதெய்வவழிபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த குலதெய்வவழிபாடு ஒரு நாள் மட்டுமேநடக்கும். அன்று பசலிட்டிவாலு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கட்டாயம் வந்து விடுவார்கள்.
இடும்பையா  கோவில்


அன்றுமுழுவதும் எல்லோரும் சாமிகும்பிடலாம்.ஆனால் இரவு படையலுக்கு மட்டும் பசலிட்டிவாலு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும், பசலிட்டி வாலு குடும்பத்தில் பிறந்த பெண் வேறு ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் கூட வரகூடாது என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது.அன்று இரவு படையல் வைத்து சாமி கும்பிடுவார்கள், அப்போது இடும்பையவை அழைத்து அருள் கேட்பார்கள். (கணேசன் தாத்தா இவர் மேல்தான் இடும்பையா வந்து அருள் சொல்லும்) பிறகு படையல் சாப்பாட்டை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து கோவிலியே இரவு சாப்பாடு நடக்கும்.இப்படியாக இந்த இடும்பன் கோவில் குலதெய்வவழிபாடு சிறந்த முறையில் நடக்கும் இந்த சமயத்தில் நாடகம் பிற வேடிக்கை ஏதுவும் நடைபெறுவது இல்லை என்பது கொஞ்சம் கவலையான விசயம். அப்படியும் ஒரு வருடம் இளைஞர்கள் பெரியவர்களிடன் அனுமதி கேட்டு நாடகம் நடத்தும் போது அன்று மழை வந்ததாம். அதன் பிறகு எந்த வேடிக்கைநிகழ்ச்சிகளையும் நடத்துவது இல்லை.என்னை கேட்ட இன்னும் ஒரு தடவை முயற்சி பண்ணிபார்க்கலாம் நாடகம் நடத்துவதற்கு இடும்பையா அருள் கிடைத்தால்.

சரி இப்பொழுது வைகாசி திருவிழாவுக்கு வருவோம். திருவிழா முன்றுநாட்கள் நடைபெறும்.அப்போது உடையான்பட்டிகாரர்கள் எங்கு இருந்தாலும் வந்து விடுவார்கள். இது திருவிழாவுக்கு மட்டும் அல்ல சொந்த பந்தத்தை பார்க்கவும், பெண்ணுக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்கவும்.பையனுக்கு கல்யாணம் பண்ண பெண் பார்க்கவும் இந்த திருவிழா வசதியானதாக இருக்கும்.கல்யாணத்துக்கு சொந்தகாரங்க எல்லோரும் வரவேண்டும் என்பதற்காக திருவிழா முடிந்து அதேவாரத்தில் சில கல்யாணமும் நடக்கும்.இப்படி கல்யாணம் வைப்பதால் அனைத்து சொந்தகரங்களும் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பதற்காக தான்.

திருவிழா முதல்நாள் கரகம் எடுப்பு:

திருவிழா முதல்நாள் கரகம் எடுப்பது. அன்று வீட்டில் ஒருவர் என்று எல்லோரும் கையில் கும்பத்துடன் கோவிலுக்கு சென்று விடுவோம் இரவு 6 மணி வாக்கில் கிளம்பி முள்ளிபட்டிகுளத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வரவேண்டும். முன்னாடி குளத்தில் தண்ணிர் இருந்தது இப்பொழுது இல்லை, அதனால் குளத்தின் நடுவில் ஒரு ட்ரேம்மில் தண்ணீர்  நிறைத்து வைப்பார்கள் சிலநேரம் மழையும் சரியாக கரகம் எடுக்கும் நேரம் வருவதும் உண்டு, தீர்த்தம் எடுக்க நாங்கள் மட்டும் போவது இல்லை எங்கள் கூட முத்தாளம்மனும் முனியாண்டி சாமியும் கூடவரும் தீர்த்தம் எடுத்து தலையில் வைத்து கொண்டு முத்தாளம்மன்  போடும் ஒரு ஆட்டம் இருக்கே சும்மா அவ்வளவு அழகா இருக்கும் பத்தாததுக்கு முனியாண்டி சாமியும் சேர்ந்து கொள்ள ஆட்டம் தூள் பறக்கும்.
குளத்தில் இருந்து  கோவிலை நோக்கி கரகம் எடுத்துவரும் பாதை.

இதில் முத்தாளம்மன்னாக சோமு தாத்தாவும். முனியாண்டியாக முருகவேல் அண்ணனும் கரகஎடுப்பில் பங்கேற்பார்கள்.இவர்கள் கோவிலுக்கு அடிமை பட்ட குடும்பம் என்று என் பாட்டி சொன்னார்கள், இவர்கள் மட்டும் தான் முத்தாளம்மனுக்கு கரகம் எடுக்க முடியுமாம். சோமு தாத்தாவுக்கு முன்னாடி அவருடைய அப்பா மாரியப்பன் தான் கரகம் எடுத்தாராம். ஒரு வழியாக கரகம் எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி கடைசியாக கோவிலில்வந்து ஒரு ஆட்டம் போட்டு முடியும். பின்பு எடுத்து கொண்டு வந்த கரகத்தை கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு எடுத்து செல்ல வேண்டும். பின்பு இரவு வள்ளி திருமணம் அல்லது அரிசந்திரன் மயான கண்டம் இதில் எதாவது ஒரு நாடகம் நடைபெறும்.பொதுவாக வள்ளிதிருமணம் தான் நடைபெறும்.எனக்கு நினைவு தெரிந்தநாள் வரை இந்த வள்ளிதிருமணம் நாடகம் பார்த்துகொண்டு இருக்ககிறேன் இதுநாள் வரை சலிப்பு வந்தது இல்லை, இதில் முதலில் பப்பூன் ஒரு ஒருமணி நேரம் பழைய பாட்டு புதுபாட்டு இரண்டும் கலந்து பாடிகொண்டு இருப்பார் அப்பொழுது அவர்பாடிய பாடல் யாருக்கு பிடித்து இருக்கின்றதோ அவர்கள் ஒரு துண்டு சிட்டில் அவர்பெயர் எழுதி கூட பத்து இருபது வைத்து பப்பூனிடம் கொடுப்பர். அவர் அதை வாங்கிகொண்டு  ஒலிபெருக்கி முலம் அவர் பெயர் சொல்லி நன்றி தெருவிப்பர், இதற்காகவே ஒரு கூட்டம் முன்வரியில் அமர்ந்து இருக்கும்.  போனவருசம் நானும் சரவணன் மாமாவும் முத்துக்கு முத்தாக பாட்டை பாராட்டி இருபது ரூபாய் குடுத்தோம்ன பார்த்துகங்க. அது ஒரு சந்தோசம்ங்க கோடி குடுத்தாலும் வராது.அதுக்கெல்லாம் முன்னாடி நாடகம் பார்க்க இடம் பிடிகிறது இருக்கே,அதுதாங்க பெரிய விசயம்.

 கரகம் எடுத்து ஆடிமுடிச்சதும் பாய் கொண்டுவந்து இடத்தை புக் பண்ணிருவாங்க. கொஞ்சம் தாமதமாக போனாலும் இடம் கிடைக்காது. அப்புறம் ஆலமரத்தடியில் நின்று கொண்டுதான் நாடகம் பார்க்கவேண்டும். இப்படியாக முதல்நாள் முடிந்து விடும். அடுத்தநாள் நாள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமான நாள்.



இரண்டம் நாள் கிடா வெட்டும் மாவிளக்கும்:

ஆமங்க இரண்டாவது நாள் தான் எங்களுக்கு பிடித்த நாள் பங்குனி பொங்கல் போலவே தான்.அவர்கள் அவர்கள் வீட்டில் வந்து உள்ள உறவினரை பொறுத்து ஆடா  அல்லது கோழியா என்று முடிவு செய்வார்கள்.பின்பு கிடா வெட்டும் நேரம் அறிவிப்பு ஆனதும் எல்லோரும் ஆடு அல்லது கோழியை பிடித்துகொண்டு கோவிலில் ஆடு அறுக்கும் இடத்திற்கு சென்று பின்பு அறுத்ததும் கோவிலை சுற்றி வந்து சாமி கும்பிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விடுவோம் இத்துடன் எங்கள் வேலை முடிந்து விடும்.
மற்றவற்றை விட்டில் உள்ளவர்கள் பார்த்து கொள்வார்கள. அதன் பிறகு எங்களை ஊருக்குள் பார்க்க முடியாது காரணம் மதியம் அசைவ சாப்பாடு என்பதற்காக நிறைய சாப்பிடவேண்டும் என்பதற்காகவும் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஆவம்பட்டி கேணிக்கு குளிக்க சென்று விடுவோம் சரியாக சாப்பிடும் நேரத்திற்கு வருவோம் கேணிக்கு குளிக்கசெல்வது ஏனென்று உங்களுக்கு தெரியாது. சொல்கிறேன் கேணியில் சாப்பிடாமல் குளித்தால் பயங்கரமா பசி எடுக்கும். இப்போது காரணம் புரிகிறதா.பொதுவா வீட்டில் கொஞ்சமாதான் சாப்பிடுவோம் ஏனென்றால் எல்லோர் வீடுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்பதற்காக. சாப்பிடவில்லை என்றாலும் விடமாட்டார்கள் அதனால்தான். பிறகு வீட்டில் உள்ளவர்கள் மாவிளக்கு செய்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதன் பின்தான் சமையல் தொடங்கும் பின்பு இரவு மறுபடியும் நாடகம் அல்லது சினிமா படம் திரை கட்டி ஓட்டுவார்கள் மூன்று படம் கண்பிக்கபடும் என்று அறிவிப்பு மதியம் முதல் ஒளிபரப்பாகும். அதனால் கூட்டம் நிறைய வரும், அதற்காகஎன்று திடீர் டீ கடைகளும், பச்சி கடை,பலூன் கடை என்று திருவிழாவுக்கு என்னென்ன தேவையோ அது எல்லாம் கிடைக்கும், நாடகத்துக்கு கூட இடம் பிடித்து விடலாம் ஆனால் படம் பார்க்க இடம் பிடிப்பது கடினம்தான்.என்ன ஆனாலும் சரி இன்று மூன்று படத்தையும் பார்க்கமா தூங்ககூடாதுனு சபதம் செய்து உட்கார்ந்தாலும் முதல் படம் முடிந்ததுமே தூங்கிவிடுவதும் உண்டு. சிலபேர் மூன்று படத்தையும் பார்த்துவிட்டு செல்வதும் உண்டு. மறுநாள் அவர்களிடம் கதை கேட்க ஒரு சின்னபசங்க கூட்டம் ஒன்று சுற்றி வரும். இவை எல்லாம் திருவிழா நாட்களில் மட்டுமே காணகூடிய மறக்கமுடியாத அனுபவம்.

முன்றாவது நாள் பார்வேட்டை:
   
இது தாங்க எங்களுக்குஎன்று உள்ள நாள் இந்த நாளிலும் கோழி ஆடு என்று எல்லாமும் உண்டு. ஆனால் விஷயம் சயந்திரம் தான் இருக்கு, அதுவரை நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் குழந்தைகளுக்குகான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இந்த அறிவிப்பு காலை எட்டு மணிமுதல் துவங்கி விடும்.
கோவில் முன்புறம்   இங்கு தான்  பார்வேட்டை  நடைபெறும்

குழந்தைகள் அவரவர் விரும்பும் விளையாடில் பெயர் கொடுத்து போட்டியில் விளையாடி பரிசும் பெறுவார்கள். இதில் எங்களுக்கான போட்டி பானை உடைத்தல் தான்.ரொம்ப சுவாரசியமா இருக்கும் போனவருஷம் யார் உடைத்தார்கள் என்று ஞாபகம் இல்லை இந்த வருஷம் பாக்கலாம் யார் உடைக்குற என்று?.
 சிறுவர்களுக்கான போட்டிகள் முடிந்ததும் அடுத்து ஒரு பெரிய UPL நடக்கும். (அதாங்க உடையாண்பட்டி பிரிமியர் லீக்) இந்த போட்டி போன வருஷம் முதல் தான் தொடங்கியது ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை பங்கேற்கும் விளையாட்டு போட்டி, வெற்றி தோல்வி பற்றி கவலை படுவது இல்லை. வெற்றி பெற்ற அணிக்கு சன்மானம் வழங்கப்படும் அதை திருவிழா நேரத்தில் திண்பண்டம் வாங்கவும் மற்ற செலவுக்கு உபயோக படுத்துவார்கள் சிறுவர்கள். அதன் பின் பார்வேட்டை  சாயந்திரம் நாலு மணிவாக்கில் தொடங்க ஆரம்பிக்கும் ஊரில் உள்ள இளைஞர்கள்,சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டாக வேண்டும். இது முத்தாளம்மனுக்கு செய்யும் நேர்த்தி கடன் போன்றது. எல்லாரும் வந்த பிறகு கோவிலில் இருந்து கிளம்பி முள்ளிபட்டி ஊருக்கு பக்கத்துல இருக்குற தென்னம்தோப்பிற்கு  சென்று அவர் அவர் விரும்பிய மாறுவேடம் போடுவார்கள்,மாறுவேடம் போடுவதற்காக என்று நேதாஜி இளைஞர்மன்றம் சார்பில் மாறுவேடத்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். அதனால் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவதற்கு வசதியாக இருக்கும். இதில் கொஞ்சம் விதிவிலக்க பாஸ்கர் அண்ணன் வைக்கோல் பூதம் வேஷமும், ரவி மாமா கொரத்தி வேஷமும் தான் போடுவார்கள் என்னனு தெரியல அவுகளுக்கு அது பிடுச்சு போச்சு. யார அடையாளம் தெரியுதோ இல்லையோ இவுங்க இரண்டு பேரையும் எல்லோருக்கும் தெரியும். அதுலயும் ரவி மாமாவுக்கு தனியா  ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு.இப்படி எல்லோரும் அவரவர் விரும்பிய வேஷம் போட்டுக்கொண்டு ஊர்முழுவதும் சுற்றிவரும் போது ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் ஆடுவோம் இதற்க்காகவே ட்ரம் செட் ஆட்கள் எங்களின் முன்பு செல்வர்கள். பார்வேட்டை ஆரம்பித்து விட்டது என்றால், உடையன்பட்டி மட்டும் அல்லது பக்கத்துக்கு ஊரான முள்ளிபட்டி, கொண்ணியம் பட்டி, ஆவம்பட்டி.சடையம்பட்டியில் இருந்தும் ஆட்கள் வந்து பார்வேட்டையை ரசிப்பார்கள். இப்படி ஊர்முழுவது சுற்றிவந்து கடைசியாக கோவில் முன்பு ஒன்று கூடுவோம் பின்பு அனைவரும் ஒரு வட்டவடிவில் அமர்ந்துகொள்வார்கள். ஊர்காரர்களும் சுற்றி நிற்பார்கள் அப்போது வேஷம் போட்ட அனைவரும் இரண்டு பேர்விதம் வந்து ஆடுவார்கள். அங்கு யாருக்கும் ஆட தெரியாது இருந்தாலும் ஆடுவார்கள். நிறைய வருடம் சுற்றி வரும்போது கூட்டதோடு சேர்ந்து ஆடிவிட்டு கோவில் முன்பு தனியாக ஆட வேண்டுமே என்பதற்காக கடைசி நிமிடத்தில் காணாமல்போவதும் உண்டு,அதில் முதலில் காணாமல்போவது நானாகவே இருப்பேன்.நல்ல ஆடுரவங்கன்னு சில பேர் இருக்காங்க அவுங்க ஆட்டத்துக்கு தனி ரசிகர்களும் உண்டு. கார்த்தி மாப்புள இவரு ஆட ஆரம்பிச்ச துணைக்கு ஆடுறவர் பாடு கொஞ்சம் சிரமம் தான். துணைக்கு ஆடுறது பெரும்பாலும் ரவி மாம்ஸ் தான் இருக்கும். கொஞ்சம் வருசமா இவரு ஆட்டத்த பார்க்கமுடியல இந்த வருஷம் பார்க்கலாம்ன்னு நினைக்ககிறேன்.போன வருஷம் காமேஷ் மாப்புள, மணிகண்டன் தம்பி. ஜோடி கலக்குனாங்க இந்த வருஷம் பார்க்கலாம் யாரு கலக்ககுறான்னு. இப்படியாக ஆட்டம் முடிந்ததும் பானக்கம்.மாவிளக்கு கொடுப்பார்கள். அதை சாப்பிட்டுவிட்டு அடுத்து குளிப்பதுதான் ரொம்ப சிரமம் வேஷம் போடுற ஆர்வத்தில் நிறைய கலர்பொடியை அள்ளி அப்பிகொள்வார்கள், என்னதான் தேய்த்துகுளித்தாலும் அந்த கலர்பொடி போகாது, எப்படியும் இரண்டு நாட்கள் அந்த கலர்பொடி இருக்கும். பின்பு இரவு மறுபடியும் நாடகம் அல்லது சினிமா என்று அன்றுஉடன் திருவிழா இனிமையாக நிறைவுபெறும், வெறும் மூன்று நாட்கள் தான் என்றாலும் அதன் நினைவுகள் அந்த வருடம் முழுவதும் நிலைத்து இருக்கும்.அன்று பார்த்த நண்பர்களை மறுபடியும் அடுத்த திருவிழாவுக்கு தான் பார்க்க முடியும் என்பது கொஞ்சம் வேதனையான விசயம். இருந்தாலும் இந்த முன்று நாட்களில் நாங்கள் போடும் ஆட்டம் அளப்பரியது தான். சரி இந்த வருஷம் திருவிழாவுக்கு யார் யார் வரிங்க கை தூக்குங்க பார்போம்.  

Friday, 5 April 2013

பங்குனி பொங்கல்



                                                                       
பொங்கலுக்காக ஒரு வருடத்துக்கு முன்பு நெந்து விடப்பட்ட சேவல்
                                                                               

                                                                                பங்குனி பொங்கல்


இப்ப திருவிழா நேரம் வந்தாச்சு வைகாசி 7 ன்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஊர் பெரியவங்க கூடி தேதி குறிச்சாச்சு திருவிழாவுக்கு எப்ப வரன்னு கேட்டு போன் வெளிஊர் மட்டும் இல்லாம வெளிநாடு வரைக்கும் போய்கிட்டு இருக்கு,இந்த மாசம் கூட ஒரு விசேஷம் வருதுங்க ஆமா கொன்னையூர் பொங்கல்தான் அது.கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழா  பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கும்.வர்ற ஞாயிறு அன்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதன் ஒரு பகுதியாக. 

உடையாண்பட்டி மட்டும் இல்லாம சுத்துபட்டு எல்லா ஊருலையும் பங்குனி கடைசி அதாவது வர்ற ஞாயிறு அன்னைக்கு எல்லார் வீடுகலிலும் கண்டிப்பா பொங்கல் வைபாங்க இந்த சமயத்துல நாட்டுகோழி விலை எப்படியும் 350 ரூபாய் இருக்கும்.நாம தேடி போகவேண்டியது இல்லை,கோழி விப்பவர் ஊர் ஊரற வந்து விற்பார்கள் கொன்னையூர் பொங்கல் வந்துச்சுனா கோழி வியாபாரிக குசி ஆகிடுவாங்க.கோழி வைத்து இருபவர்கள் கோழி காலில் கலர் துணியை கட்டி அடையலாம் வைத்து கொள்வார்கள்.பொங்கலுக்கும் கோழிக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறிங்களா?


கோழி இல்லாம பொங்கலே இல்லேங்க ஆமங்க இந்த மாசம் கொன்னையூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேரம் வர்ற ஞாயிறு அன்னைக்குதான் கொன்னையூர் மாரியம்மன்னுக்கு பொங்கல் வைப்பாங்க அதேநேரத்துல எங்க ஊருலயும் பொங்கல் வைத்ததும் கோழி அறுத்து 

கொண்ணையூர் முத்துமாரியம்மன் கோவில்
கொன்னையூர் மாரியம்மன்னை கும்பிடுவோம் அப்புறம் என்னகோழிகுழம்புதான். இது என்னபா பெரிய அதிசயம் இப்பநினைசா கூடதான்கோழிகுழம்பு பண்ண முடியும்ன்னு நீங்க நினச்ச அது தப்பு நீங்க எங்க வேணுமுனாலும் சாப்புடலாம் ஆனால் பங்குனி பொங்கல் அன்னைக்கு  சாப்புடுற கோழிகுழம்பு மாதிரி வராதுங்க.

அடுத்து சித்திரை பொங்கல் இது  ஊர் பொங்கல்னு சொல்லுவாங்க சித்திரை ஒன்னு அன்னைக்கு ஊருல உள்ள எல்லோரும் விநாயகர் கோவிலில் பொங்கல் வைப்பாங்க அன்னினைக்கு சைவம் தாங்க அதுனால எங்களுக்கு பிடித்தது பங்குனி பொங்கல்தான் ஆனால் இந்த வருஷம் போகமுடியல சரி வைகாசி முன்றாவது நாள் திருவிழவில் பாத்துக்கலாம் அது என்ன முன்றாவது நாள் திருவிழாவான்னு கேக்கிறிங்களா?

அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 


நினைவுகளுடன்

உடையான்பட்டிகாரன்

Wednesday, 3 April 2013

நான் கண்டு மகிழ்ந்தத என் கிராமத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.



நான் கண்டு மகிழ்ந்தத என் கிராமத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இன்னும் சிறிதுகாலத்தில் இப்படி இருந்ததா என்று நம் இளையதலைமுறை கேட்ககூடும். அவர்களுக்கு நாம் கிராமத்தை பற்றி சொல்லவேண்டியது நமது கடமை. அப்படிபட்ட ஓன்று தான் “கள்ளிகாட்டு இதிகாசம் வைரமுத்து ஐயா அவர் கடமையை முடித்து விட்டார், நான் இப்போதுதான் தொடங்கி உள்ளேன். தப்பும் தவறுமாய் என் தமிழில் நடை பகில்கிறேன்.  தவறு இருந்தால் மன்னிக்கவும். என்னை பற்றி நான் சொல்லாமல் வேறு யார்சொல்வது? என் ஊரை பற்றி நான் சொல்லாமல் வேறு யார் சொல்வது?.எல்லோருக்கும் வாழ்கையில் ஒரு வெற்றிடம்  வரும் எனக்கும் வந்தது அதை நான் இந்த இடுகை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறேன்.இதன் அருமை இப்போது தெரியாவிட்டாலும் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு உடையான்பட்டிகாரன் இதை பார்க்க நேர்ந்தால்  அப்போது அவனுக்கு தெரியும்அவன் யார் என்று.

இது ஒரு சிறிய முயற்சி மட்டும் தான்.பணம் சம்பாதிப்பது,கல்யாணம்,வீடுகட்டுவது,குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்குவது, என்று தன் குடுபத்துக்கு செய்யும்  முயற்சியில் சிறிது நீ பிறந்த ஊருக்கு செய் அப்போது உனக்கு உண்மையான மனநிம்மதி கிடைக்கும்.

நன்றி

உடையான்பட்டிகாரன்